அப்துல்கலாம் பொன்மொழிகள் - Abdul Kalam quotes in Tamil - அப்துல்கலாம் தத்துவங்கள்
இலட்சியம், குறிக்கோள் எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்: APJ Abdul Kalam quotes in Tamil
உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பார்கள்!
கனவு காணுங்கள்...கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
உன்னால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்.
நீ கடைசியாய் செய்த தவறு தான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்.
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்.
நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டும் முடியும்.
நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.
நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் இலட்சியம்!
மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.
அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!
என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.
மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
வெற்றி பெற்றவர்களின் கதைகள் உங்களுக்கு வெறும் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதை தன் வெற்றி பெறுவதற்கான வழிகளை சொல்லும்.
அறிவுரை, ஆலோசனை எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
எங்கே இதயத்தில் அறம் ஒழுக்கம் இருக்கிறதோ, அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும். எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ, அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும். எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ, அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும். எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ, அப்போது உலகில் அமைதி நிலவும்.
வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!
நமது பிறப்பு ஓர் சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
திறமை, ஆற்றல் எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு நதி போல... ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக...
நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும்தான் தோல்வி எனும் நோயைக் கொல்வதற்கான மருந்துகள்.
சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.
சரியான காரியத்தை செய்ய எளிமையான வழி என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள். அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.
ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நூறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.
பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதை போன்றதாகும்.
உயர்வு,உயர்ந்தவன் என்னும் முன்வடிவில் அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகள்:
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்,உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
உழைப்பு என்ற முன்வடிவில் அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகள்:
கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும். கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
முட்டாள், மூடன் எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
முயற்சி என்ன?, விடாமுயற்சி என்ன? அப்துல்கலாம் பொன்மொழிகள்:
முயற்சிகள் தவறலாம்... ஆனால் முயற்சிக்க தவறாதே.
சிந்தனை, எண்ணம் எனும் முன்வடிவில் அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகள்:
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான். கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.
அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.
ஈடுபாடின்றி வெற்றி இல்லை! ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை! சிந்தனை செய்யுங்கள், அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!
தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
நட்பு, நண்பன் எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.
ஆசிரியர், குரு பற்றி அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகள்:
இளைஞர்களின் அறிவுச் சுடரை ஏற்ற வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு.
ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
இசை பற்றி அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகள்:
இசையும், நடனமும் உங்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கு மகிழ்ச்சியும், அமைதியும் தென்றலாக வீசச் செய்யும்.
அறிவு, அறிவாளி, அறிஞர்- எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது. அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
மனிதன் - எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்.
சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.
மகிழ்ச்சி - எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
கல்வி எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூறப்பட விரும்புகிறீர்கள்?
வெற்றி எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
ஒரு மனிதனை வெல்வதைவிட அவன் இதயத்தைக் வெல்வது சிறந்தது!
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
தனித்துவமாக இருக்க இதற்கு முன் எவரும் சந்தித்திராத கடினமான யுத்தத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் பலன் நிச்சயம். இதற்கு நான் உத்தரவாதம்.
காலம், நேரம் எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம், சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!
ஆசை, பேராசை எனும் முன்வடிவில் அப்துல்கலாம் பொன்மொழிகள்:
தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!
ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.